சி.ஏ., தேர்வர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…!! தேர்வு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள அதிரடி மாற்றம்..!!
இந்திய தணிக்கை துறையானது, காலியாக உள்ள பட்டய கணக்காளர் பணிகளுக்கு ஆண்டுதோறும் சி.ஏ., தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், இந்த தேர்வானது முதல்நிலை, இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகள் என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதில், குறிப்பாக முதல்நிலை மற்றும் இடைநிலை தேர்வுகள் ஆண்டிற்கு மூன்று முறையும், இறுதி தேர்வுகள் ஆண்டிற்கு இரண்டு முறையும் நடைபெறும். இந்நிலையில், தற்போது இந்த சி.ஏ., தேர்வுமுறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த சி.ஏ., இறுதி தேர்வானது, இனி ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் என ஆண்டிற்கு மூன்று முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்பர்மேசன் சிஸ்டம் ஆடிட் என்ற தகுதி பாடநெறி தேர்வும், இனி பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் என ஆண்டிற்கு மூன்று முறை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சி.ஏ., தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
























