தேசிய அளவிலான சி.ஏ தேர்வில் சேலம் மாணவர் முதலிடம் – 553 மதிப்பெண் பெற்று சாதனை!!
கணக்கு தணிக்கையாளர் பணிக்கான சி.ஏ தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சி.ஏ தேர்வில் முதலிடம்:
அகில இந்திய அளவில் கணக்கு தணிக்கையாளர் பணிகளுக்கான சிஏ தேர்வு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் 800 க்கு 553 மதிப்பெண் பெற்று பழைய பாடத்திட்டத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
அண்ணா பல்கலை 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!
இதுகுறித்து அவர் கூறியதாவது, “தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என் தந்தை அறிவுரையின்படி 12 ஆம் வகுப்பு முடித்ததும் சி.ஏ படிப்பில் சேர்ந்தேன். 3 ஆண்டுகள் ஆடிட்டர் செந்தில் என்பவரிடம் பயிற்சி பெற்றேன். இதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இறுதி தேர்வுக்கு தயாராகினேன். நன்றாக தேர்வு எழுதியுள்ளேன் என நம்பினேன். அதன்படி மதிப்பெண் கிடைத்தது. ஆனால் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை”, இவ்வாறு அவர் கூறினார்.
CBSE 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
மேலும் இந்த தேர்வில் பழைய பாடதிட்டத்தின் படி சேலம் இசக்கி ராஜ் முதலிடமும், சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரீபிரியா இரண்டாவது இடமும் பெற்றார். புதிய பாடதிட்டடத்தின் படி தேசிய அளவில் மும்பையை சேர்ந்த கோமல் கிஷோர் ஜெயின் 75% மதிப்பெண்களுடன் முதலிடமும், சூரத் மாணவர் முதீத் அகர்வால் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை அறிய https://icaiexam.icai.org என்ற இணையதளத்தை காணலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்