தலைமை ஆசிரியர்களுக்கான வெகுமதி தொகை வழங்கும் திட்டம் – பிப்ரவரி 19 கடைசி நாள்!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களின் சேர்க்கை அளித்து பள்ளியை தொடர செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கான வெகுமதி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கான வெகுமதி தொகை வழங்க அனைத்து மாவட்ட தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்து அனுப்ப மாவட்ட முதன்மை அலுவலர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வெகுமதி தொகை வழங்கும் திட்டம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு சேர்க்கை வழங்கி அவர்களை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைத்து படிக்க ஊக்குவிக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு வெகுமதி வழங்கப்படுகிறது.
தேசிய அளவிலான சி.ஏ தேர்வில் சேலம் மாணவர் முதலிடம் – 553 மதிப்பெண் பெற்று சாதனை!!
இந்த ஆண்டு இதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக செயலாற்றி வரும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை excel format-ல் தயார் செய்து அனுப்பப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்து பெற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்