பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Business Correspondent Supervisors பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க நாளை 10.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Business Correspondent Supervisors பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 21 முதல் 45 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க நாளை 10.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.