விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து மீண்டும் வெளியேறிய அபிஷேக் – ரசிகர்கள் உற்சாகம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீண்டும் போட்டியாளர் அபிஷேக் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பிக்பாஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ்க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில் ஒளிபரப்பானது நல்ல வெற்றியை கண்டதும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கிலும், மலையாளம் போன்ற 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழில் 5 வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீசன் 5 வில் ஒவ்வொரு போட்டியாளரும் தனித்து விளையாடுகின்றனர். அதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சியை ஆர்வமாக கண்டு கழிக்கின்றனர்.
தமிழகத்தில் டிச.7ம் தேதி மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது சீசன் 5 வில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர், இதில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறினார். இதில் வைல்டு கார்டு என்ரியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அபிஷேக் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் யூடியூப் சேனல் மூலம் சினிமா விமர்சனங்கள் செய்து பிரபலமானவர். இவர் சீசன் 5 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குறைவான வாக்குகள் பெற்று எலிமினேஷன் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்தியாவில் ‘சர்வதேச விமான பயணிகளுக்கு’ கடும் கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே வந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் போட்டியாளர்களால் அபிஷேக் நாமினேட் செய்யப்பட்டு குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால் இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த வாரம் கொரோனா பாதித்திருந்த நடிகர் கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.