தமிழகத்தில் டிச.7ம் தேதி மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக வருகிற டிச.7- ஆம் தேதி சென்னை எண்ணூர் பகுதியில் ஒரு நாள் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தற்போது பருவ மழைக்காலம் என்பதால் ஏராளமான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மின் கம்பங்கள் அநேக இடங்களில் சாய்ந்து விழுந்துள்ளன. அத்துடன் அதிகம் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் ஏராளமான இடங்களில் விழுந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
இதனால் தமிழக அரசு மின் விபத்துகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு வருகின்றன. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக கடைபிடித்து வருகிறது. இதன் விளைவாக வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி சென்னை எண்ணூர் பகுதியில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மேலும் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணா நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம் நகர், வ.உ.சி நகர், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ் வாரியக் குடியிருப்புப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை அன்று ஒரு நாள் மட்டும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.