தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பத்தை தீர்க்கும் விதமாக தமிழக சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், பேருந்துகள் என அனைத்து விதமான பொது இடங்களிலும் மக்களுக்குபல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ‘சர்வதேச விமான பயணிகளுக்கு’ கடும் கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த ஓமைக்ரான் தொற்று குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என்று கூறியுள்ளார். ஓமைக்ரான் தொற்று பாதிப்பை உறுதி செய்ய 5 முதல் 7 நாட்கள் வரை தேவைப்படுகிறது. ஆனாலும் ஓமைக்ரான் தொற்று பாதித்த அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு ஏதும் இதுவரை ஏற்படவில்லை.
நாம் அனைவரும் அலட்சியம் காட்டாமல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் முறையே கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பழங்குடியினர் முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆனால் நகர்புறத்தில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் 3வது கட்ட தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கேட்டு வருகின்றனர். மத்திய அரசு இது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.