விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் தற்போது முக்கிய கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக இணையத்தில் செய்திகள் கசிந்து வருகிறது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா சீரியல்:
விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தனது குடும்பத்தினர் அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும் பாரதி ஒரு கட்டத்தில் தனது தோழி வெண்பாவின் பேச்சினை கேட்டு தனது மனைவி கண்ணம்மாவை சந்தேகப்படுகிறார். இதனால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது குழந்தைகள் என்று பாரதி தெரியாமல் இருக்கிறார். அவர் கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு அதுவும் நடக்காமல் இருக்கிறது.
இப்படி பல வித ட்விஸ்டுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் இந்த சீரியல் லாஜிக் இல்லாமல் செல்லுகிறது என்றே கூறலாம். காரணம், நகரத்தின் பெரிய டாக்டராக இருக்கும் பாரதி ஏன் ஒரு DNA டெஸ்ட் எடுக்க அவ்வளவு யோசிக்கிறார் என்பது தான். அவர் அப்படி எடுத்தால் கதையே முடிந்து விடும்.
இப்படி இருக்க, இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் தானா என்று சரியாக தெரியவில்லை. இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அடுத்த சீசனாக கூட லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் வளர்ந்து இருப்பது போல காட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சீரியல் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.