ராதிகா கழுத்தில் தாலி கட்ட போகும் கோபி – பரபரப்பான காட்சிகளுடன் “பாக்கியலட்சுமி”!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமணம் நடைபெற இருக்கிறது. 25 வருசமாக பாக்கியா உடன் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட இருக்கிறார். இது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரசியமான காட்சிகள் இனி வரும் எபிசோடுகள் வர இருக்கிறது. பல சிக்கல்களை தாண்டி கோபி ராதிகாவின் திருமணம் நடக்குமா என்பதே பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது. மேலும் பாக்கியா கோபி கல்யாணத்தில் சமைக்க, அவரை வெறுப்பேற்றும்படி திருமணம் செய்ய வேண்டும் என கோபி நினைக்கிறார். அதற்காக அவருடைய சமையல் ஆர்டரை கேன்சல் செய்யாமல் இருக்கிறார் கோபி. பாக்கியா இரவெல்லாம் கோபி நியாபகத்துடன் இருக்க, இருப்பினும் தன்னுடைய வேலையை சரியாக செய்து முடிக்கிறார்.
மறுநாள் காலையில் கோபி மாப்பிள்ளை கோலத்தில் பட்டு வேஷ்டி சட்டையுடன் தயாராக, ராதிகாவும் திருமண புடவையில் கிளம்பி தயாராகிறார். இருவரும் மேடைக்கு ஜோடியாக வர பாக்கியா அவர்களை பார்த்து வருத்தப்படுகிறார், ஆனால் தனக்கு வேலை தான் முக்கியம் என்பதால் மனதை கல்லாக்கி கொண்டு வேலையை கவனிக்கிறார். இதற்கிடையே ஐயர் மந்திரம் எல்லாம் சொல்லி முடிக்க, கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
கோபி சொன்னது போலவே ராதிகா கழுத்தில் தாலி கட்டுவாரா, பாக்கியாவின் வாழ்க்கை என்ன ஆகும் என்பது எல்லாம் அடுத்தக்கட்ட கதைக்களமாக இருக்க போகிறது. மேலும் இதுவரை பாக்கியலட்சுமி சீரியலில் இருந்தது போல கதை இல்லாமல் கோபி ராதிகாவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், பாக்கியா குடும்பத்தை நடத்த எப்படி எல்லாம் கஷ்டப்படுவார் என்பதை வைத்தே சீரியல் கொண்டு செல்லப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்