மூர்த்தி கட்டி காத்த கௌரவமே போச்சே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய கண்ணன்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கண்ணன் சம்பாரித்து கொடுக்க போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
சின்னத்திரையில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் தற்போது கதிர் வீட்டை விட்டு வெளியேறி தன் மனைவியுடன் சேர்ந்து ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். தொடர்ந்து நஷ்டம் மட்டுமே வருவதால் வாடிக்கையாளர்களை கவர அடுத்தடுத்து பல சலுகைகளை கதிர் வழங்குகிறார். மேலும் இன்று வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்புப் பலகையையும் ஹோட்டலுக்கு முன் வைத்திருக்கிறார்.
இதனால் வாடிக்கையாளர்கள் ஹோட்டலில் குவிகின்றனர். சாப்பிட்ட பிறகு தங்களால் இயன்ற பணத்தை உண்டியலில் போட வேண்டும் என்பதற்காக உண்டியலை வைக்கிறார். சிலர் மட்டுமே அந்த உண்டியலில் பணத்தை போடுகின்றனர். மறுபுறம் கண்ணன் தான் வேலை பார்க்கும் இடத்தில் தவறு ஒன்றை செய்கிறார்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” போட்டியாளர்கள்.. யார் தெரியுமா? பைனல் லிஸ்ட் இதோ!
Exams Daily Mobile App Download
அதாவது கண்ணன் வேலை பார்க்கும் பைனான்ஸ் ஆபிஸில் அதிகாரி ஒருவர் லஞ்சமாக பெரும் பணத்திற்கு கண்ணனும் உறுதுணையாக நிற்கிறார். இதற்காக கண்ணனுக்கும் லஞ்சத்தில் இருந்து ஒரு தொகை கொடுக்கப்படுகிறது. முதலில் அந்த பணத்தை வாங்க மறுத்த கண்ணன் பின்னர் வாங்கிக்கொள்கிறார். இதை பார்த்த நமக்கே அதிர்ச்சி தான். இவ்வளவு நாள் மூர்த்தி சேர்த்து வைத்த கௌரவம் இப்படி காற்றில் பறந்து விட்டதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்