என் அம்மா பத்தி பேச நீ யாருடி.. ராதிகாவின் பேச்சால் கடுப்பான கோபி – திருமணத்திற்கு முன்பே வெடித்த பூகம்பம்!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி, ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எங்கே இந்த திருமணம் நடந்துவிடுமோ என்று ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் அதிக விறுவிறுப்புடன் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது தான் கோபியை விட்டு பிரிந்து பாக்கியா தனியாக வாழ முடிவெடுத்துள்ளார். மேலும் தன் குடும்ப செலவுகளை சமாளிக்க பெரிய சமையல் கான்ட்ராக்ட் ஆர்டர் ஒன்றை மிகவும் சிரமப்பட்டு எடுத்துள்ளார்.
அந்த திருமணம் தன் முன்னாள் கணவர் கோபியின் திருமணம் என்று தெரிந்த பின்பும் தன்மானதுடன் அந்த திருமணத்தில் சமைக்க உள்ளார் பாக்கியா. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதில் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ், ஈஸ்வரி வீட்டிற்கு சென்று சண்டை போடுகிறார். மேலும் இதை தாங்கி கொள்ளாத ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு சென்று ராதிகாவை கண்டபடி பேசுகிறார்.
அப்பாடா.. ஒரு வழியா முடிச்சாங்களே.. கடைசி எபிசோடுக்கு தயாரான பாரதி கண்ணம்மா – ரொம்ப சந்தோசம்!
Exams Daily Mobile App Download
ஓரளவுக்கு மேல் பொறுத்து கொள்ளமுடியாத ராதிகா ஈஸ்வரியை திட்ட ஆரம்பிக்கிறார். தன் அம்மா மேல் உயிராய் இருக்கும் கோபிக்கு இதை சகித்துகொள்ள முடியவில்லை. இதனால் நீ யார் என் அம்மாவை தவறாக பேச என கூறி ராதிகாவிடம் சண்டையிடுகிறார். திருமணத்திற்கு முன்பே கோபி ராதிகா இடையே சண்டை எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் ‘இனி இந்த திருமணம் நடந்த மாதிரி தான், என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன அடுத்து நடக்கப்போகிறது என்று..
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்