BECIL ஆணையத்தில் மாதம் ரூ.49,800/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022– உடனே விரையுங்கள்!
Content Auditor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.49,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Content Auditor,Monitor |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online/Offline |
BECIL காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Content Auditor,Monitor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL கல்வித் தகுதி:
- Content Auditor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Journalism/ Mass Communication பாடப்பிரிவில் PG டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
- Monitor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் கணினி உள்ளவராக இருக்க வேண்டும்.
BECIL அனுபவ விவரம் :
- Content Auditor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் visual media or news agencies ANI,PTI, UNI போன்ற பணி சார்ந்த துறையில் மூன்று வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Monitor பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Media / News பணி சார்ந்த துறையில் ஒரு வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
NIT திருச்சியில் வேலை 2022 – B.Tech/B.E முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!
Exams Daily Mobile App Download
BECIL ஊதிய விவரம் :
- Content Auditor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.49,800/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
- Monitor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.28,635/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
BECIL தேர்வு செய்யப்படும் முறை :
Content Auditor, Monitor நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பப்படிவங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாள் (26.12.2022) முடிவதற்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .