விஜய் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் பிரமாண்ட சீரியல் – ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகர்!
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமையான கதையுடன், கதைக்கு பொருத்தமான நடிகர் நடிகைகள் இருப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் “ஆஹா கல்யாணம்” என்ற புது சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அதில் வரும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
ஆஹா கல்யாணம் சீரியல்:
சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு எந்த அளவிற்கு மவுசு இருக்கிறதோ, அந்த அளவிற்கு விஜய் டிவி சீரியல்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். புதுமையான கதையுடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது புது சீரியல்களும் விஜய் டிவியில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அடுத்தடுத்து 4 புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அதன் படி சிறகடிக்க ஆசை, பொன்னி, விக்ரம் வேதா, மற்றும் ஆஹா கல்யாணம் உள்ளிட்ட சீரியல்கள் இனி வரும் வாரங்களில் புதிதாக தொடங்கப்பட இருக்கின்றன.
Follow our Instagram for more Latest Updates
அதில் ஆஹா கல்யாணம் சீரியல் Star Jalsha சேனலின் பிளாக்பஸ்டர் சீரியலான Gaatchora இன் ரீமேக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆண் கதாநாயகர்கள் மற்றும் 3 பெண் கதாநாயகிகள் இருக்கின்றனர். இந்த சீரியலில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து பிரபலமான ஜெய் மற்றும் இசையருவி, ட்யூன்ஸ்6 ஆகிய சேனல்களில் VJ ஆக பணிபுரிந்த VJ ராம் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். மேலும் கதாநாயகியாக புதிய நடிகையான காயத்ரி மற்றும் சில்லுனு ஒரு காதல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை தர்ஷினி கவுடா ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
சிப்பிக்குள் முத்து தொடரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் ரோலில் நடித்து பாராட்டு பெற்றவர் ஜெய். தற்போது இவர் மீண்டும் ஆஹா கல்யாணம் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.