
IPL 2025 : மே 25 ஆம் தேதிக்குள் தொடரை முடிக்க ஏற்பாடு…!! வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்க அணிகளுக்கு BCCI அறிவுறுத்தல்..!!
இந்தியன் பிரிமியர் தொடரின் 18வது பதிப்பானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. மேலும், இந்தியா – பாகிஸ்தானிடையே போர் ஏற்படும் சூழல் உண்டானதால், IPL போட்டிகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதாக BCCI அறிவித்தது. இதனால், வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் மற்றும் நாடுகளுக்கு திரும்பினார். இந்நிலையில், தற்போது இரு நாடுகளும் போரை கைவிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மீண்டும் IPL போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!
இந்நிலையில், BCCI சொந்த ஊர் மற்றும் நாடுகளுக்கு சென்றுள்ள வீரர்களை வரும் மே 13ம் தேதிக்குள் ஒருங்கிணைக்குமாறு அனைத்து அணி நிர்வாகத்திற்கும் BCCI அறிவுறுத்தியுள்ளது. மேலும், எஞ்சியுள்ள 16 போட்டிகளை வரும் மே 25 ஆம் தேதிக்குள் முடிக்கவும், ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்தவும் BCCI பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

























