இனி காலதாமதமாக பந்து வீசினால் அபராதம் விதிக்கப்படாது.. BCCI வெளியிட்ட புதிய விதிமுறை மாற்றம்..
கொரோனா காலகட்டத்தின் போது கிரிக்கெட் போட்டிகளில், பௌலர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தினால், அதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் எனக் கூறி, பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால் டெத் ஓவர்களின்போது ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை என பல்வேறு பௌலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடப்பாண்டிற்கான IPL போட்டிகளில் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நீக்கியுள்ளது. இதை தொடர்ந்து, மேலும் ஒரு புதிய விதியை மாற்றி அமைத்துள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
விரைவில் இறக்குமதி வரிகளை இந்தியா குறைக்கும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த ஷாக்கிங் தகவல்..
அதாவது, “கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்டிக் பாண்டிய, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை என்பதால் 30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான IPL போட்டிகளில் காலதாமதமாக பந்து வீசினால் அபராதம்/ தடை விதிக்கப்படாது என்றும், அதற்கு பதிலாக புள்ளிகள் குறைக்கப்படும் இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆனது 2027 ஆம் ஆண்டு வரை தொடரும் என்று BCCI தெரிவித்துள்ளது”.



























