விரைவில் இறக்குமதி வரிகளை இந்தியா குறைக்கும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த ஷாக்கிங் தகவல்..
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடுகளிடையே அமெரிக்காவின் பொருளாதார நிலையை முன்னிலை படுத்த மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் இறக்குமதி பொருட்களின் சேவைகளுக்கு அதிக வரி விதிப்பு என்ற வழிமுறையை தற்போது அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். மேலும், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமெரிக்கா பரஸ்பர வரி விதிக்கும் நடவடிக்கை நடைமுறை படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வரி விதிப்பு குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அரசு சார்பில் 25,000 புதிய வீடுகள் கட்டும் திட்டம்…ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்
அதாவது, “இந்தியாவுடன் தமக்கு நல்ல உறவு உள்ளது, உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடு என்பதுதான் இந்தியாவுடன் உள்ள ஒரே பிரச்சனை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை குறைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்”.
























