அஞ்சலிக்கு பிரசவம், பாரதி & கண்ணம்மாவிற்கு விவாகரத்து – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா தொடரில் அதிரடியாக புதிய கண்ணம்மா மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரத்தில் அடுத்து வர இருக்கும் காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இனி தொடர்ந்து பல திருப்பங்கள் வர உள்ளதாக தெரிகிறது.
புதிய திருப்பங்கள்:
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து ரோஷினி விலகியுள்ளார். இதனால் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு வினுஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய கண்ணம்மா தோன்றும் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அவரை வைத்து ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய கண்ணம்மாவை மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில், இந்த வாரம் அடுத்து வர இருக்கும் காட்சிகளில் பல திருப்பங்களும் நிகழ உள்ளது.
‘என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க’ – டாப் சீரியல்களின் சூப்பர் கமெண்ட்ஸ்!
இன்றைய எபிசோடில் இருந்து புதிய கண்ணம்மா களம் இறங்குகிறார். நீதிமன்றத்தில் பாரதி கண்ணம்மாவிடம் இருந்து எப்படியாவது விவாகரத்து பெற்று விட துடிக்கிறார். இதனால் சௌந்தர்யாவும், வேணுவும் கவலையில் உள்ளனர். ஆனால் கண்ணம்மா விவாகரத்து தர மறுக்கிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். இன்னொரு புறம் அஞ்சலிக்கு பிரசவ வலி வந்து மிகவும் சிரமப்படுகிறார். அஞ்சலிக்கு உடலில் பிரச்சனை இருப்பது தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அகில் அஞ்சலியை காப்பாற்ற மிகவும் போராடுகிறார். ஒரு வழியாக, அஞ்சலி உயிருக்கு போராடி குழந்தையை பெற்றெடுக்கிறார்.
ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷாவின் வெற்றிப் பயணம் – ஏமாற்றம், அவமானத்தை கடந்து சாதித்த கதை!
சிறையில் இருக்கும் அஞ்சலி கண்ணம்மா தன்னை வசமாக சிக்க வைத்ததை நினைத்து மிகவும் கோவத்தில் இருக்கிறார். அவரை பெயிலில் எடுப்பதற்கான உதவியை கேட்டு வருகிறார். ஒரு வழியாக பெயில் கிடைத்து சிறையில் இருந்து வெளியில் வரும் வெண்பா, கண்ணம்மாவிற்கு தொடர்ந்து இன்னும் அதிக சிக்கல்களை தருகிறார். இதனால் அடுத்து வரும் நாட்களின் கண்ணம்மா மிகவும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பது போன்ற காட்சிகள் வர உள்ளது.