கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி? விடாமல் மிரட்டும் வெண்பா!!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இன்று கண்ணம்மாவிடம் பாரதியை விவாகரத்து செய்யும்படி வெண்பா மிரட்டுகிறார். இதனால் கண்ணம்மா மிகவும் சோகம் அடைந்து விடுகிறார்.
வெண்பா vs கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலில் தற்போது வில்லி வெண்பா அஞ்சலியை கொலை செய்யும் அளவிற்கு இறங்கி விட்டார். அஞ்சலியை அதிக டோஸேஜ் உள்ள மாத்திரைகளை சாப்பிட சொல்லுகிறார். நாளுக்கு நாள் அஞ்சலிக்கு நெஞ்சு வலி அதிகமாக ஏற்பட்டாலும், அஞ்சலி வெண்பா கொடுத்த மாத்திரைகளை இரண்டாக சாப்பிட யோசனை செய்கிறார். மாத்திரையை கையில் வைத்திருக்கும் போது சரியாக பல்லி வந்து அவர் மேல் விழுந்து விடுகிறது. இதனால் தீவிரமான யோசனையில் அஞ்சலி இருக்கிறார்.
விரைவில் முடிவுக்கு வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் – அடுத்தடுத்த திருப்பங்கள்!!
மாத்திரையை கையில் வைத்து கொண்டு அஞ்சலி யோசிப்பதை பார்த்து விட்டு சௌந்தர்யா என்னவென்று கேட்கிறார். அதற்கு வெண்பா கூறியதை அஞ்சலி கூறியதும் சௌந்தர்யாவிற்கு கோபம் வந்து விடுகிறது. வெண்பா ஒரு அரைகுறை டாக்டர் என்றும் அதனால் அவள் சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் அஞ்சலி வேறு வழியில்லாமல் ஒரு மாத்திரையை மட்டும் சாப்பிடுகிறார். பின்னர், வெண்பா கண்ணம்மா தனக்கு கால் செய்யாமல் இருப்பதால் பயங்கர கோபத்தில் இருக்கிறார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் செம ட்விஸ்ட் – செண்பகத்தை கோவிலுக்கு கூட்டி செல்லும் கல்பனா!
போன் செய்தால் நன்றாக மிரட்டி விட வேண்டும் என்றும் யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போது சரியாக கண்ணம்மா போன் செய்கிறார். ஆனால், வெண்பா போனை அட்டென்ட் செய்யாமல் இருக்கிறார். ஆனால், கண்ணம்மா மீண்டும் மீண்டும் போன் செய்யவும், வெண்பா எடுத்து பேசுகிறார். அப்போதும் தனக்கு கேட்கவில்லை என்று கூறுகிறார். வெண்பாவின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் கண்ணம்மா நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று விடுகிறார். அங்கு கண்ணம்மாவை எதிர்பார்த்திராத வெண்பா அரண்டு போய் விடுகிறார். கண்ணம்மா வந்து அவரை கழுத்தை பிடித்து நெரிக்கிறார். அப்போது வெண்பா பாரதியை விவாகரத்து செய்தால் தான் இரண்டாவது குழந்தையை தருவேன் என்று மிரட்டுகிறார்.