சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் செம ட்விஸ்ட் – செண்பகத்தை கோவிலுக்கு கூட்டி செல்லும் கல்பனா!
சன் டிவி “ரோஜா” சீரியலில், செண்பகத்திற்கு பழைய ஞாபகம் வருவதற்காக ஒரு கோவிலுக்கு கூட்டிக் கொண்டு செல்கின்றனர். அங்கே அர்ஜுன் ரோஜா சிறு வயதில் விளையாடிய ஞாபகம் செண்பகத்திற்கு வருகிறது.
ரோஜா சீரியல்:
சன் டிவி “ரோஜா” சீரியலில், செண்பகத்திற்கு பழைய நியாபகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் ரோஜா தான் தன்னுடைய மகள் என நினைத்து பாசத்தை கொடுக்கிறார். அதை பார்த்த அணு கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில் செண்பகத்திற்கு பழைய ஞாபகங்கள் வர, கல்பனா ஒரு திட்டம் சொல்கிறார். அதன் படி, கல்பனா ஒரு கோவிலை சொல்லி அங்கே சென்றால் உனக்கு பழைய ஞாபகங்கள் அனைத்தும் வரும் என சொல்கிறார். அர்ஜுன் ரோஜா செண்பகம் கல்பனா ஆகியோர் கோவிலுக்கு செல்கின்றனர்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 கோலாகலம் – தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்! வெளியான போட்டோ!
அப்போது கோவில் உள்ளே நுழைந்ததும் செண்பகத்திற்கு அர்ஜுன் ரோஜா சிறு குழந்தைகளாக இருக்கும் போது ஒன்றாக விளையாடியது ஞாபகம் வருகிறது. அர்ஜுன் ரோஜா சிறுவர்களாக அந்த கோவில் குளத்தடியில் விளையாடுகின்றனர். அர்ஜுன் ரோஜாவை உப்பு மூட்டை தூக்கி செல்கிறார். உடனே செண்பகம் எனக்கு இந்த கோவிலுக்குள் வந்ததும் ஏதோ செய்கிறது என சொல்கிறார்.
கண்ணம்மாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி – ஆப் ஸ்கிரீன் வைரல் புகைப்படம்!
ஆமாம் உனக்கு பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது என கல்பனா சொல்கிறார். அப்போ செண்பகத்திற்கு உண்மையாகவே பழைய ஞாபகம் அனைத்தும் வந்து விட்டதா என ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. மேலும் செண்பகத்திற்கு பழைய ஞாபகம் வர இன்னும் 500 எபிசோட் ஆகும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அர்ஜுன் ரோஜாவை சிறு வயதில் பார்க்க ஆவலுடன் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.