Bank of Baroda வங்கியில் டிகிரி முடித்தால் வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 4 கடைசி நாள்..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Branch Receivables Manager பணிக்கு என்று மொத்தமாக 159 காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் (04.04.2022) நாளைக்குள் விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு விவரங்கள்:
பேங்க் ஆப் பரோடா வங்கியில் Branch Receivables Manager பணிக்கு என்று மொத்தமாக 159 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Personal Interview மூலம் தகுதியின்மை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.600/- என்றும், SC, ST, PWD & Women பிரிவினருக்கு ரூ.100/- என்று விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களின் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பப்படுபவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க (நாளை) ஏப்ரல் 4 கடைசி நாளாகும்.