மக்கள் மத்தியில் வங்கி கணக்குகள் மூலம் செய்யப்படும் மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போது புதுவிதமான மோசடி எப்படி நடக்கிறது என இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கி மோசடி
மக்கள் பலர் வங்கி சேவைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக பலர் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்கின்றனர். ஆனால் அதில் நன்மைகள் இருந்தாலும் மோசடிகளும் அதிகமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை பகிர கூடாது என பல முறை எச்சரித்துள்ளது. ஆனாலும் மோசடிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் 34 வயதான நபர் ஒருவரின் செல்போனிற்கு எஸ்பிஐ வங்கியில் இருந்து வருவது போல மெசேஜ் வந்துள்ளது.
சமூகப் பாதுகாப்புத் துறையில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
அதில் உங்களுடைய வங்கி கணக்கிற்கு ரிவார்டு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைன் மூலமாக கேட்கப்பட்டுள்ளது. பின் செல்போனிற்கு ஓடிபி வர அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ. 44 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. உடனே அவர் பதறி வங்கியை தொடர்பு கொள்ள மோசடி செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின் அவர் போலீசில் புகார் அளிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.