சமீபத்தில் தொடங்கப்பட்ட, எல்ஐசி ஆதார்ஷிலா திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரட்டை நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆதாயத் திட்டம் ஆகும். இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.
LIC Aadharshila திட்டம் 2024 :
எல்ஐசி ஆதார்ஷிலா திட்டம், குறிப்பாக பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட நிதி அதிகாரமளிக்கும் திட்டம் ஆகும். இது பெண்கள் தங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.
வங்கி கணக்கு மெசேஜ் மூலம் புதுவித மோசடி – சைபர் கிரைம் எச்சரிக்கை!
எல்ஐசி ஆதார்ஷிலா திட்டத்திற்கு தகுதி பெற, பெண்கள் வயதானது குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான வரி கணக்கு, சம்பள சீட்டு ஆகிய கட்டாய ஆவணங்கள் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். முழுப் பணத்தைத் திரும்பப் பெற 15 நாட்களுக்குள் பாலிசியை ரத்து செய்யலாம். மேலும் மூன்று வருட பிரீமியம் செலுத்திய பிறகு பாலிசிதரர்களுக்கு கடன் வசதி வழங்கப்படும். பாலிசிதாரர் பாலிசி துவங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால், குடும்பம் இறப்பு பலனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.