‘கோபி மீது சந்தேகப்படும் ராதிகா’ – எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர்!!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது இன்றைய எபிசோடில் ராதிகாவிற்கு வீடு விஷயத்தில் கோபி மீது சந்தேகம் வருகிறது. இதனை எப்படி கோபி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து காணலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா ஸ்கூலில் சமைத்து கொடுத்ததற்காக ஹெட் மாஸ்டர் சம்பளம் கொடுக்கிறார். இது பாக்கியாவிற்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இனியாவிடம் டீச்சர் உங்க அம்மாவை போல இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதனால் பாக்கியா குஷியாகிறார். இந்த பணத்திற்கு அனைவருக்கும் டிரஸ் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார்.
TN Job “FB Group” Join Now
அதே போல அத்தை, செழியன், கோபி, எழில் என அனைவர்க்கும் டிரஸ் எடுத்துக் கொடுக்கிறார். வீட்டில் வந்து அனைவர்க்கும் வாங்கி வந்ததை கொடுத்து சந்தோஷமடைகின்றனர். அடுத்ததாக ராதிகா எதையோ யோசித்துக்கொண்டிருக்க அப்பொழுது கோபி வருகிறார். வீடு விஷயத்தை பற்றி பேசுகிறார். தான் 2 வக்கீலிடம் இதனை பற்றி விசாரித்ததாக சொல்கிறார். இதனால் கோபி ஷாக்காகிறார்.
மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் – ஊரடங்கு தளர்வுகள் அமல்!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. அப்பறம் எதுக்கு அந்த வீட்டை பத்தி உங்க வக்கீல் அப்படி சொன்னாரு?? என்று கேட்க கோபி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மேலும் உங்கள் மீது தான் எனக்கு சந்தேகம் என்று பட்டென்று பேசி விடுகிறார் ராதிகா. இதனால் கோவமடையும் கோபி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் – மத்திய அரசின் புதிய திட்டம்!!
கடைசியில் நீ வீடு வாங்க போறான்னு தெரிஞ்சதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நல்ல இடமா வாங்கணும்னு தான் நான் எவ்ளோ விசாரிச்சேன் என்று சொல்கிறார். கடைசியில் ராதிகா அந்த வீடு தனக்கு பிடித்திருப்பதாகவும் வாங்க போவதாகவும் சொல்கிறார். இதனால் கோபிக்கு அதிர்ச்சியாகிறது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டுள்ளார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.