மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் – ஊரடங்கு தளர்வுகள் அமல்!
டெல்லி பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேற்கொண்டதன் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
இந்தியாவில் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லியில் தொடக்க காலத்தில் பாதிப்பு தீவிரமாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல வாரங்களாக கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக தற்போது அங்கு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 381 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தற்போது கொரோனா தொற்றினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,889 ஆக குறைந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் ஊரடங்கினை தளர்த்த அரசு முடிவு செய்து சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி சந்தை மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகள் அனைத்தும் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் – மத்திய அரசின் புதிய திட்டம்!!
அதேபோல் அரசு, தனியார் நிறுவனங்களும் 50 சதவிகித பணியாளர்களுடன் செய்லபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை 50 சதவிகித பயணிகளுடன் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்பு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.