ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு – 35 ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!

0
ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு - 35 ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!
ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு - 35 ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!
ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு – 35 ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!

இந்தியாவில் ராணுவப் பணிகான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனையடுத்து ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சேவை:

இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அனைத்து துறைகளும் கடுமையான சரிவை சந்தித்தது. அந்த வகையில் மற்ற துறைகளை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையும் பாதிக்கப்பட்டது.ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை இன்றி காணப்பட்டதால் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. தொற்று முழுமையாக குறையாத நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

Exams Daily Mobile App Download

ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. தற்போது ரயில்கள் வழக்கம் போல இயங்கி வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் 2 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனை தற்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் எனும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களும், இளம்பெண்களும் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களின் விருப்பம், பணித் திறன் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்கு வட இந்திய மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. பீகாரில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைத்துள்ளனர். அதனால் தற்போது 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!