ஐடி பணியாளர்களே உஷார்! குறையும் வேலைவாய்ப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகமாக ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் நியமனத்தை நிறுவனங்கள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த நிலையில், ஐடி துறை எந்தவித மாற்றமும் இன்றி இயங்கி வந்தது. ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்தே 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் நேரடியாக அலுவலகம் சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது உலகளவில் அதிகமாக பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. அதனால் ஐடி துறைகளில் புதிய பணியாளர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து ஊழியர்களுக்கான தேவையானது குறைந்துள்ள நிலையில், 10 – 20% வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இது குறித்து adecco மதிப்பீடு அறிக்கையில் 8 வருடத்திற்கும் கீழான பணி அனுபவம் கொண்ட ஊழியர்கள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறையில் சுமார் 10 – 12% இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நிறுவனங்கள் ஐடி பெரிய அளவில் ஒப்பந்தங்களை எடுத்தது. ஆனால் தற்போது அவை வெகுவாக குறைந்துள்ளது.
மக்களே உஷார்.. மோசடி கும்பல்களின் புதிய யுக்தி – தமிழ்நாடு மின்சார வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
அதனால் ஒப்பந்த ஊழியர்கள், பெஞ்ச் மார்க் ஊழியர்களை குறைத்து வருகின்றன. பல நிறுவனங்கள் கொரோனா காலத்தில் தங்களது சேவைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றினார்கள். அதனால் ஐடி தேவை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அனைத்தும் மாறி இருக்கிறது. இப்படியே நிலைமை இருந்தால் அதனால் ஒப்பந்த ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஐடி நிறுவனங்களின் சுமார் 40% வருவாய் ஒப்பந்த ஊழியர்கள் இருக்கும் நிலையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இவர்களின் தேவையானது 30% குறைந்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் ஐடி ஊழியர்கள் கவனத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்