இன்று முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை -மாநில கல்வித்துறை அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தொற்று அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் முழுவதும் திடீரென்று அதிகரித்து உள்ளதால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் மே 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் வருகின்றது. நாட்டின் முக்கிய கல்வி வாரியங்களின் ஜேஇஇ, முதுகலை நீட், சிபிஎஸ்சி, மற்றும் அனைத்து கல்லூரி, பல்கலைத்தேர்வுகளும் கொரோனா தொற்றினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிக் கல்வித்துறை தகவல்!!
அருணாச்சல பிரதேசத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு விடுதிகளையும் ஏப்ரல் 26 முதல் மூடுவதற்கு ஆணையிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை பள்ளிகளில் நடத்தப்பட்ட உள் தேர்வு மதிப்பெண்களின் மூலம் மாணவர்களின் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
இந்நிலையில், அரசு நடத்தும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஏப்ரல் 26 (இன்று) முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 26ம் தேதிக்கு பிறகு திட்டமிட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் மே 31ம் தேதி வரை உள்மதிப்பீட்டுக்காக பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்