தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிக் கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக ஆசிரியர்கள் தரப்பில் இருந்து விடுமுறை கோரப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தொடர்ந்து அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் பணிகள்:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பாடங்கள் ஆன்லைன்ம், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் கற்பிக்கப்பட்டது. மேலும், 12ம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கிகள் வேலை நேரம் குறைப்பு – இன்று முதல் அமல்!!
தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளதால் 12ம் வகுப்பு மாணவர்களும் பள்ளி வர வேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா சூழல் உள்ளதால் விடுமுறை கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அலுவலர், அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர் சேர்க்கை போன்ற அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது பற்றி துறை அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் பின்னர் அறிவியக்கப்படும். நோய் பாதிப்பு உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று பணியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்