தமிழகத்தில் அக்.6 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்களுக்கு அலர்ட்!
தமிழகத்தில் வருகிற அக். 6 ஆம் தேதி மின்தடை ஏற்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
மின்தடை பகுதிகள்
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் துறைகளில் மின்சார துறையானது மக்களுக்கு சேவை செய்ய அமைக்கப்பட்ட முக்கியமான துறைகளில் ஒன்றாகும். இந்நிலையில் அரசு தடையில்லா மின்சாரம் வழங்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் மின்சார விபத்துகள், பழுதுகள் ஏற்படாத வண்ணம் மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அக். 6 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மாதந்தோறும் பராமரிப்பு பணிகளின் போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி போன்றவை நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 6 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம் மற்றும் வள்ளியூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக வள்ளியூர் மின் வினியோக செயற்பொறியாளர் வளனரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் பயனர்களுக்கு காத்திருக்கும் ஷாக் – இதெல்லாம் செய்தால் உங்க Account முடங்கும்! ஜாக்கிரதை!
Exams Daily Mobile App Download
அதன் காரணமாக கோட்டைக்கருங்குளம் மற்றும் வள்ளியூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான குமாரபுரம், கோட்டைக்கருங்குளம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், சமூகரெங்கபுரம், வள்ளியூர், செம்பாடு, தெற்கு கள்ளிகுளம், திருவம்பலாபுரம், முடவன்குளம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, சமூகரெங்கபுரம், கிழவனேரி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்