வாட்ஸ் அப் பயனர்களுக்கு காத்திருக்கும் ஷாக் – இதெல்லாம் செய்தால் உங்க Account முடங்கும்! ஜாக்கிரதை!
வாட்ஸ் அப் செயலியானது தனது பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் போதிலும், மற்றவர்களுக்கு இடையூறுகளை விளைவிப்பவர்களை கண்டிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வாட்ஸ்அப்:
உலகம் முழுவதும் அதிக அளவிலான மக்கள் தங்களது செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், வாட்ஸ் அப் செயலியின் இடத்தை பிடிப்பதற்காக பல செயலிகளும் போட்டி போட்டு வருவதும் நடந்து வருகிறது. இதனால் வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல புதிய அப்டேட்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகின்றது. அதேபோல், தங்களது பயனர்களில் சிலர் அடுத்தவர்களுக்கு இடையூறுகளை விளைவிப்பதும் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை வாட்ஸ் அப் எடுத்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் பயனர்களுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை மீறுபவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- தங்களது கான்டக்ட் லிஸ்டில் இல்லாதவர்களுக்கு அதிக செய்திகளை அனுப்பினால் அவரின் கணக்கு முடக்கப்படும்.
- வாட்ஸ் அப்பின் அங்கீகாரம் இல்லாத செயலிகளான வாட்ஸ் அப் டெல்டா, ஜிபி வாட்ஸ் அப், வாட்ஸ் அப் பிளஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் அந்த கணக்கு முடக்கப்படும்.
தீபாவளியை முன்னிட்டு ஒரேடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
- அதிக அளவிலானவர்கள் உங்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை பிளாக் செய்திருந்தாலும், உங்கள் கணக்கு முடக்கப்படும்.
- அதே போல், அதிக எண்ணிக்கையிலானவர்கள் உங்கள் மீது புகார் அளிக்கும் பட்சத்திலும் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
- அடுத்தவர்கள் மீதான போலியான செய்திகளை பரப்பினால் அவர்களின் கணக்கு முடக்கப்படும்.
- ஆபாச கருத்துக்கள், அச்சுறுத்தல்கள், மிரட்டல் போன்றவற்றை பரப்பும் போதும் கணக்கு முடக்கப்படும்.
- வன்முறையை பரப்புவது மற்றும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுபவர்கள் கணக்குகளும் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்