தீபாவளியை முன்னிட்டு ஒரேடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
அக்டோபர் மாதம் என்றாலே இந்தியா முழுவதும் அதிகப்படியான பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல், தமிழகத்தில் அடுத்து அடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், மக்கள் தங்கம் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கத்தின் விலை:
பண்டிகை காலங்களில் மக்கள் நகைகளை வாங்குவதில், அதிக ஈடுபாடோடு இருக்கின்றனர் என்றே சொல்லலாம். அதுவும் தீபாவளி காலங்களில் புது உடைகள் மற்றும் நகைகள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்ற வண்ணம் தான் இருப்பார்கள். இப்படி, நகை வாங்க விரும்பும் இல்லத்தரசிகள் தினமும் அதன் விலையை கண்காணித்து வருகின்றனர். நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தில் தான் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். போன மாதம் தங்கத்தின் விலை மிகவும் சரிந்து அனைவரும் எதிர்பாராத விதமாக, 36 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து இருந்தது. இந்த விலை இறக்கம் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது விலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம்.
மத்திய உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை – தமிழகத்தில் இவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! உஷார்!
Exams Daily Mobile App Download
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.12-க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 4,705 ரூபாய்க்கும், சவரன் 37,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்