ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? சீக்கிரம் புக் செய்வது எப்படி?
இந்தியாவில் மக்கள் பல பலர் அதிகமாக ரயில் பயணங்களை விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று டிக்கெட்டுகளை முன்னதாகவே முன்பதிவு செய்கின்றனர். அதிகப்படியான மக்கள் தங்கள் ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்கின்றனர். முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சலுகை விலையில் டிக்கெட்டுகளையும் ரயில்வே நிறுவனம் வழங்குகிறது.
ரயிலில் தட்கல் டிக்கெட் புக் செய்ய, முதலில் IRCTC செயலியை பதிவிறக்கம் செய்து உள்நுழையவும். பெயர், வயது, பெர்த் மற்றும் கோச் விருப்பம் போன்ற உங்கள் பயண விவரங்களை முன்கூட்டியே சேமிக்கவும். டிக்கெட் புக் செய்யும் போது செயல்முறை வேகமாக இருக்கும், நேரமும் மிச்சமாகும். தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு முன் அனைத்து பயணிகளின் பட்டியலையும் தயார் செய்யுங்கள். அவர்களின் பெயர்கள், வயதுகள் மற்றும் கோச்-பெர்த் விவரங்களை எழுதுங்கள். உங்கள் IRCTC கணக்கின் ‘My Profile’ பிரிவில் இந்த பட்டியலை உருவாக்கவும். ரயில் தட்கல் முன்பதிவு கட்டண முறைக்கு UPI அல்லது IRCTC e-Wallet ஐப் பயன்படுத்தி விரைவாக புக் செய்யலாம்.



























பயனுள்ள தகவல். தொடரட்டும் தங்கள் பணிகள். வாழ்த்துக்கள்.