2020 ஏப்ரல், ஜூன் வேலையில்லா திண்டாட்டம் 21% உயர்வு – ஆய்வு முடிவு!!
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலாண்டில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 21% ஆக உயரந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கொரோனா தாக்கம்:
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஒரு மூலையில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதிக்கும் பரவி விட்டது. தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உலகம் முழுவதும் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் மார்ச் மாத இறுதியில் இருந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அரசின் உத்தரவு படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
தொழிலாளர்கள் பாதிப்பு:
2020 மார்ச் மாதத்தில் ஊரடங்கு செயல்படுத்தப்படதால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டின் சுற்றுலா, விமான சேவை, தங்கும் விடுதிகள், தொழில் என்று பல்வேறு தொழில்களும் கடும் நஷ்டத்தை சந்தித்தது.
வேலை இல்லா திண்டாட்டம்:
ஊரடங்கு முறையினால் 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள மூன்று மாத காலாண்டில் நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் 21% ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் அறிவிக்கிறது. மேலும், 15 முதல் 29 வயது வரையுள்ள இளைஞர்கள் 35% பேர் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 2 மாதம் தொடர்ந்த முழு ஊரடங்கால் 12 கோடி பேர் வேலை இழந்து உள்ளதாக சி.எம்.ஐ.இ என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்