இந்திய வானிலை ஆய்வு மையமானது ஏப்ரல் 18 முதல் 20ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக் கூடும் என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்னெற்பாடு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
வெப்ப அலை:
2024 ஆம் ஆண்டு கோடை காலம் வழக்கத்தை விட மிகவும் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமானது வெப்ப அலைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் 20ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC தேர்வாணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,42,400 || உடனே விண்ணப்பியுங்கள்!
இதனை கருத்தில் கொண்டு ஒடிசா கல்வித் துறை ஆனது வெப்ப அலை தாக்கம் மற்றும் பகல் நேரம் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் ஏப்ரல் 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலத்தின் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நாட்டிலேயே அதிகபட்சமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.