கோவில் அர்ச்சகர்களாக பழங்குடியின பெண்கள் நியமனம் – மாநில அரசு அதிரடி!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவில்களில் முதல்முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அர்ச்சகர்கள் நியமனம்
ராஜஸ்தானில் உள்ள கோவில்களுக்கு “தேவஸ்தான்” என்னும் பெயரில் அறநிலைத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்கள் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேவஸ்தான அமைச்சகம் மூலமாக அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன் படி கடைசியாக 2014ல் விளம்பரம் அளிக்கப்பட்டு சுமார் 9 வருடங்களுக்கு பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் இலவச சைக்கிள்கள் – குஷியில் மாணவர்கள்!
அதன் பின் தற்போது அரசு 17 அர்ச்சகர்களை நியமித்து இருக்கிறது. அதில் 8 பேர் பெண்கள், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மேலும் இது மாநிலத்தில் முதன்முறை ஆகும். இருந்தாலும் இந்த நடவடிக்கையால் ராஜஸ்தானில் ஒரு பிரிவினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் அரசின் நடவடிக்கையால் மொத்தம் 65 பேர் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.