TNTRB மூலம் 4000 பேராசிரியர்கள் நியமனம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்ய இருக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
பேராசிரியர்கள் நியமனம்
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் மாணவிகளின் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. மேலும் வழக்கமாக இருக்கும் மாணவர் சேர்க்கையை விட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்றாவது முறை உயரும் அகவிலைப்படி – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பியான செய்தி.. காரணம் இதுவா?
ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல பேராசிரியர்கள் இல்லை என்பதால், உடனே பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், பேராசிரியர்கள் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 4000 பேராசிரியர்கள் பணியிடங்களை நீதிமன்ற உத்தரவிற்கு பின் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download