ஆப்பிள் நிறுவனத்தில் புதிய பணி நியமனம் – ஊழியர்களுக்கு அதிரடி சலுகைகள் – 1 லட்சம் வரை ஊதியம்!
உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் அண்மையில் இந்தியாவில் சில்லறை விற்பனை மையங்களை தொடங்கியது. இதில் சுமார் 170-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புதிய ஊழியர்கள்:
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் மும்பை மற்றும் டெல்லியில் தனது நேரடி விற்பனை மையங்களை அண்மையில் திறந்தது. இதன் வாயிலாக சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
TNUSRB SI (Taluk) தேர்வு 2023 – முந்தைய வினாத்தாள்கள் & விடைகளுடன்!
அதன்படி தற்போது மும்பை உள்ள தனது சில்லறை விற்பனை மையத்தில் வணிக நிபுணர்,தொழில்நுட்ப வல்லுநர், செயல்பாட்டு நிபுணர், பிசினஸ் ப்ரோ உள்ளிட்ட பதவிகளில் புதிய பணியாளர்களை நியமித்தது. அதில் மும்பையில் இயங்கும் ஆப்பிள் சில்லறை விற்பனை மையத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது ஆப்பிள் நிறுவனம் சில்லறை விற்பனை மையத்தில் பணியாற்றும் தனது ஊழியர்களுக்கு 1 லட்சத்திற்கும் மேல் ஊதியம் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஊழியர்களுக்கு பங்கு மானியங்கள், காப்பீடு, ஊதிய விடுப்பு, கல்வி நிதி உதவி மற்றும் ஆப்பிள் நிறுவன பொருட்களில் தள்ளுபடி போன்ற சலுகைகளையும் வழங்கி வருகிறது.