மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதிக்க கூடாது – ஐகோர்ட்டில் மனு!
தமிழகத்தில் உள்ள மண்டபங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் மது அருந்துவதற்கான விதிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மது அருந்த தடை
தமிழகத்தில் உள்ள பார்கள் மற்றும் உயர் ரக ஹோட்டல்களை தவிர அனைத்து பொது இடங்களிலும் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பிறகு சில பார்ட்டிகள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் மைதானங்களில் மது அருந்துவதற்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன்படி, தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் மது அருந்துவதற்கு தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதாவது, முக்கிய நிகழ்வின்போது தமிழக அரசிடம் முறையான அனுமதி வாங்கி அதற்கான கட்டணம் செலுத்தி மதுபானங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் திருமண மண்டபங்களில் மது அருந்துவதை அனுமதிக்க கூடாது எனவும், மதுபானங்களுக்கு அனுமதி அளித்த விதிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் ஐகோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.