தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்? தென்னிந்தியாவில் அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று பரவல்!
ஓமைக்ரான் தொற்று காரணமாக பல்வேறு விதிமுறைகளை உலக நாடுகள் அனைத்தும் அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
ஓமைக்ரான் பரவல்
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வர இருக்கும் கொரோனா நோய் பரவலின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றன.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது ஓமைக்ரான் வைரஸ் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உள்ளது. தற்போது இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை ஓமைக்ரான் பாதிப்பு பதிவாகவில்லை. மேலும் எல்லை மாநிலங்களில் ஓமைக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்ந்து நடைமுறையில் இருப்பது மிகவும் ஆபத்தானது.
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினிகளை குறிப்பிடுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
இதனால் தமிழ்நாட்டிலும் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டியது அவசியமானது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் ஓமைக்ரான் பரவல் வராமல் தடுக்க அண்டை மாநிலத்தின் எல்லைகளை மூட வேண்டும். மேலும் மீண்டும் இ பாஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் தான் ஓமைக்ரான் பரவலில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.