PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினிகளை குறிப்பிடுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
EPFO தற்போது தொழிலாளர் வைப்பு நிதி வைத்திருக்கும் அனைவரும் தங்களது நாமினியை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிவித்து உள்ளது. இதற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி ஆகும்.
EPFO அறிவிப்பு:
இந்தியாவில் ஏராளமான மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொண்டுள்ளனர். இவ்வாறு சேமிக்கப்படும் நிதியானது அவர் இறக்கும் பொழுது இந்த நிதி யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் இந்த PF நிதி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கணக்கரும் தங்களின் PF கணக்கு தொடர்பான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
TNPSC 365 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
இதனை நாமினி தொடர்பான விவரங்களை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உள்ளீடாக தர வேண்டும். காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பி.எஃப். தொகை மூலமாக கணக்காரின் பெற்றோர்கள், மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்கு நாமினிகளை கட்டாயமான முறையில் குறிப்பிட வேண்டும். அத்துடன் கொரோனா காலங்களில் இந்த PF தொகை மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த நாமினியை நாமினேஷன் செய்வதற்கு முதலில் EPFO-ன் அதிகார தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சர்விஸ்-க்கு கீழ் உள்ள Bar Employee என்ற OPTION-னை தேர்வு செய்ய வேண்டும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்!
அதனை தொடர்ந்து அதிலுள்ள ‘Member UAN/Online Service (OCS/OTCP)’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அத்துடன் யு.ஏ.என் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும். இப்பொழுது மேனேஜ் என்பதன் கீழ் தங்களின் இ-நாமினேஷனை உள்ளீடாக கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து Family Declaration என்பதை மாற்ற விரும்பினால் அதில் உள்ள Add family details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை தேர்வு செய்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.