தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள வண்டலூரில் நாளை ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. அத்துடன் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் மின் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தற்போது பருவமழை காலம் என்பதால் அநேக இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் ஏராளமான இடங்களில் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்துள்ளது. இதையடுத்து மின் கம்பங்கள் சாலைகளில் விழுந்துள்ளன.

PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினிகளை குறிப்பிடுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இவ்வாறு மின் விபத்துகள் ஏராளமான இடங்களில் ஏற்படுகிறது. இதனை முறையாக மாதந்தோறும் சரி செய்ய மின் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது. இவ்வாறு மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடையை மாதந்தோறும் மின்வாரியம் அறிவிக்கிறது. இந்த மின்தடையை முறையாக தேதி, நேரம் குறித்து அறிவித்த பின் அரசு செயல்படுத்தும். அதனை தொடர்ந்து நாளை (டிச.14) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC 365 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

மேலும் நாளை இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் மற்றும் மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி, கீழக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (டிச.14) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் எனவும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!