4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!

0
4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனம் - அதிர்ச்சி தகவல்!
4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!

உலகளவில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் சிஸ்கோ நிறுவனமும் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊழியர்கள் பணிநீக்கம்:

உலகளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. அந்த வகையில் சிஸ்கோ நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஜன.,21 பணி நாளாக அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த் தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் தற்போது சிஸ்கோ நிறுவனம் இணைந்துள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி, அந்நிறுவனம் தனது பணியாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தை பணிநீக்கம் செய்யதொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி நெட்வொர்க்கிங் துறையில் 4000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அந்த நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 5 சதவிகிதம் ஆகும். இந்த பணிநீக்கங்கள் குறித்து சிஸ்கோ நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த முடிவை இலகுவாக எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!