தமிழகத்தில் ஜன.,21 பணி நாளாக அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜன.,21 பணி நாளாக அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.,21 பணி நாளாக அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.,21 பணி நாளாக அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை ஈடு செய்ய ஜனவரி 21 பணி நாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு:

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் படகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்த மக்களால் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஜனவரி மாதம் 4 ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் – மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை.. வானிலை தகவல் இதோ!

Exams Daily Mobile App Download

இது குறித்த அறிவிப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிர்த் வெளியிட்டார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் தற்போது ஜனவரி 4 ஆம் தேதி வெளியிட்ட விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 21 ஆம் தேதி மாவட்டத்தில் வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜனவரி 21 ஆம் தேதி வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!