அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் – பட்ஜெட்டில் வெளியாகுமா?

0
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் – பட்ஜெட்டில் வெளியாகுமா?

அரசு ஊழியர்கள் பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு:

2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இதன் பிறகான ஆட்சி குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது. இந்நிலையில் தொழிலாளர் சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுக்கு இடையே விவாதங்கள் நடந்து வருகிறது. அதன்படி தற்போது ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு 240 ஆக உள்ளது. இவற்றை 300 ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருவதாகவும், இவை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு இனி விடுமுறை இல்லை – மாணவர்களின் கவனத்திற்கு.. தயாரா இருங்க!

இதைத்தவிர வேலை நேரம், வருடாந்திர விடுப்பு, ஓய்வூரியம், பிஎஃப், வீட்டு சம்பளம், ஓய்வு போன்றவைகள் குறித்தும் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு உரித்தான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வர உள்ள பட்ஜெட்டில் ஊழியர்களை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இது போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அறிவிப்புகளின் மூலமாக ஊழியர்களின் வாக்கு வங்கிகள் அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!