அண்ணா பல்கலை ஆன்லைன் செமஸ்டர் தேர்வு – மாணவர்கள் தவிப்பு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் சர்வர் பிரச்சனை காரணமாக, பல மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக தெரிவித்து உள்ளனர்.
செமஸ்டர் தேர்வு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்ததால் கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படுகிறது. பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ள போதிலும், ஆன்லைன் கல்வி தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆண்டுக்கு இருமுறை ‘நீட் தேர்வு’ – மத்திய அரசு ஒப்புதல்
தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் முறையில் 2020 டிசம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏராளமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இம்மாதம் முழுவதும் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் சர்வர் பிரச்சனையால் பெரும் இன்னலுக்கு ஆளாவதாக கூறப்பட்டு உள்ளது. ஒரு மணிநேரம் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள மாணவர்கள் இணையதள பக்கத்தில் உள் நுழைந்ததும் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வெழுத முடியாமல் அப்படியே நிற்கிறது.
தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 90% மாணவர்கள் வருகை!!
இதனை சரிசெய்வதற்குள் தேர்வுக்கான நேரம் முடிந்து விடுவதால் பெரும்பாலான மாணவர்களால் தேர்வெழுத முடியாமல் போகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அண்ணா பல்கலை அளித்துள்ள உதவி எண்களை தொடர்பு கொள்ளும் பொழுது பல நேரங்களில் உரிய பதில் இல்லை என மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் சர்வர் பிரச்சனையை சரிசெய்ய விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்