பிப்ரவரி 8 முதல் பொறியியல் வகுப்புகள் தொடக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்த முழு விபரங்களை வெளியிட்டு உள்ளது. இதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கடந்த டிசம்பர் மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில் பிப்ரவரி மாதம் நீட்டிக்கப்ட்ட ஊரடங்கு தளர்வுகளில் பிப்ரவரி 8ம் தேதி முதல் இளநிலை, முதுநிலை உட்பட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது!!
மேலும் மாணவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் தேதி குறித்த முழு விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதலும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதலும் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஒரு வகுப்பறையில் 10 மாணவர்க்கு மட்டுமே அனுமதி!!
அண்ணா பல்கலை பதிவாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மாணவர்களுக்கான விடுதிகள் பிப்ரவரி 8ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் எனவும், முதுகலை மாணவர்களுக்கு மார்ச் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முழு விபரங்களை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ www.annauniv.edu இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Thanks you iya