அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது.. அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் பேச்சு..
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். மேலும், வரிகள் குறித்த திட்டத்தை ஆதரித்து வாதிட்ட டிரம்ப், “மற்ற நாடுகளை வளப்படுத்த நமது குடிமக்களுக்கு வரி விதிப்பதற்கு பதிலாக, நமது குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்போம்” என்றார். இதை தொடர்ந்து, ரோட்டுண்டாவில் பேசிய டிரம்ப் “அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது” என்றார்.
அதாவது, டொனால்ட் டிரம்ப் தனது பதவியேற்பு உரையில் தனது பதவி காலத்தில் “அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும், இதுவரையில்லாத வலுவான அமெரிக்காவை கட்டமைப்பேன் என்றும், இந்த நாளிலிருந்து நமது நாடு செழித்து, மதிக்கப்படும்” என்று கூறினார். மேலும், எனது அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வசமுள்ள அதிகாரங்களை ஒருங்கிணைத்து, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்க முயற்சி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.



























