Alphabet நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் – CEO வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!
முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆல்பாபெட் சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் வாழ்ந்துள்ளனர்.
ஊழியர்கள் பணி நீக்கம்:
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த வருடம் முதல் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வருவாய் இழப்பு காரணமாக அண்மையில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் 3,000ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் CEO அறிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை – ரூ. 30 லட்சம் அபராதம் விதிப்பு!
இந்த அறிவிப்பு தொழில்நுட்பத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்புகள் அமெரிக்க ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூகுள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 16 வாரங்களுக்கான சம்பளத் தொகை இழப்பீடாக கிடைக்கும் என்று ஆல்பாபெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.