ஏர் இந்தியா விமானத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை – ரூ. 30 லட்சம் அபராதம் விதிப்பு!
ஏர் இந்திய விமான பயணத்தில் ஒரு பயணி மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் விமான நிறுவனத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா:
நவம்பர் 26ம் தேதி அன்று ஒட்டு மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு ஒன்று ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது. அதாவது, ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு பயணித்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் பயணி ஒருவர் 70 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்து விட்டார். இதற்காக அவர் மன்னிப்பு எதுவும் அப்பெண்மணியிடம் கேட்கவில்லை.
வயது மூத்த குடிமக்களுக்கு அரசு அளித்துள்ள ஜாக்பாட் அறிவிப்பு – இலவச புனித பயண வாய்ப்பு!
இதற்காக, அப்பெண் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் பெங்களூர் போலீசாரால் கைது செய்து சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பாக, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விசாரணை நடத்திஉள்ளது. அதன் இறுதியில், விமானத்தின் தலைமை இயக்க நிர்வாகிக்கு கடமை தவறிய காரணத்திற்காக 3 மாதம் அவரது உரிமம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
குறிப்பாக, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் மற்றும், ஏர் இந்தியா விமான சேவைகள் இயக்குனருக்கும் ரூ.3 லட்சத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.