தமிழக உணவகங்களில் ஷவர்மா, தந்தூரி விற்க மீண்டும் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் ஷவர்மா, தந்தூரி மற்றும் கிரில் விற்பனை செய்ய சில நிபந்தனைகளுடன் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தந்தூரி விற்க அனுமதி:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சவர்மா, கிரில், தந்தூரி உள்ளிட்ட சிக்கன் வகைகளை உணவகங்களில் உண்டு உணவு ஒவ்வாமையின் காரணத்தினால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உணவு பாதுகாப்புத் துறையினர் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டு தரமற்ற உணவுகளை விநியோகம் செய்யும் உணவகங்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்யக்கூடாது என பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.
தமிழகத்தில் அக்.12ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரம் இதோ!
இதனைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் நாமக்கல் மாவட்ட உணவகங்களில் மீண்டும் சவர்மா, கிரில் மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட வகைகளை விற்பனை செய்யலாம் என பாதுகாப்புத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். அதாவது, சிக்கன் வகைகளை தயார் செய்யும் போது உணவகங்கள் கட்டாயமாக உணவுகளில் ரசாயனம் சேர்க்கக்கூடாது எனவும், இறைச்சி உணவுகளை பதப்படுத்தி இருப்பில் வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் பாதுகாப்புத் துறையினர் அனைத்து உணவகங்களுக்கும் எச்சரித்துள்ளனர். மேலும், மீதம் இருக்கும் இறைச்சியை பொதுமக்களுக்கு மறுநாள் விநியோகம் செய்யாமல் சுகாதார முறைப்படி உணவகங்களை நடத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.